செய்திகள்
குதிரை காலில் சீட்டு கட்டிய ரங்கசாமி

குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்த ரங்கசாமி

Published On 2021-06-04 09:34 GMT   |   Update On 2021-06-04 09:34 GMT
தேர்தலில் வெற்றி பெற்று ரங்கசாமி முதல்-அமைச்சரானாலும் கூட்டணியில் அமைச்சரவை பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். முருக பக்தரான ரங்கசாமி ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவார்.

தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சாமிக்கு கோரிமேட்டில் தனியாக கோவில் கட்டியுள்ளார். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையில் விசே‌ஷ பூஜை, அன்னதானம் செய்து வழிபடுவார்.

முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சேலம் அப்பா பைத்தியம் சாமிகள் ஜீவசமாதி சென்று வருவார். தேர்தலில் வெற்றி பெற்று ரங்கசாமி முதல்-அமைச்சரானாலும் கூட்டணியில் அமைச்சரவை பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.

சமீபத்தில் சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தணி கிராமத்தில் உள்ள தனது குல தெய்வம் கோவிலுக்கு சென்றார்.

அய்யனராப்பன், பொற்கலை, பூரணி சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் கோவில் வாசலில் உள்ள குதிரை சிலையின் கால்களில் வேண்டுதல் சீட்டையும் ரங்கசாமி கட்டினார்.



Tags:    

Similar News