செய்திகள்
சிறப்பான தொடக்கம் கொடுத்த ஹரி நிஷாந்த்

டிஎன்பிஎல் கிரிக்கெட் - 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல்

Published On 2021-07-27 17:57 GMT   |   Update On 2021-07-27 17:57 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
சென்னை:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராஜகோபால் 45 ரன்னும், மொகமது கான் 26 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



மோகித் ஹரிஹரன் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மோகித் ஹரிஹரன் 41 ரன்னும், சுவாமிநாதன் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
Tags:    

Similar News