செய்திகள்
செயலாளர் ஹித்தேஸ்குமார் எஸ்.மக்வானா,இயக்குனர் சரவணவேல்ராஜ்,கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருப்பூரில் எல்லை விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்

Published On 2021-10-23 10:07 GMT   |   Update On 2021-10-23 10:08 GMT
கருத்து கேட்பு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் முழுமை திட்ட எல்லை விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் ஹித்தேஸ்குமார் எஸ்.மக்வானா தலைமையில் நடைபெற்றது. 

இதில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ,மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார், நகர் ஊரமைப்பு இயக்குனர் சரவணவேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் மேம்படுத்த வேண்டிய பணிகள், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலை விரிவாக்கப்பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது . 

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

ஆலோசனைகளை கேட்டுக் கொண்ட முதன்மை செயலர் அவை குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News