செய்திகள்
கோப்புபடம்

மன்னார்குடி அருகே நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்

Published On 2021-04-06 09:04 GMT   |   Update On 2021-04-06 09:04 GMT
பஞ்சாப், அரியானா மாநிலங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதை கண்டித்து மன்னார்குடியில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி:

பஞ்சாப், அரியானா மாநிலங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதை கண்டித்து மன்னார்குடியை அடுத்த பாமணி கிராமத்தில் உள்ள மத்திய நெல் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மன்னார்குடி பந்தலடியில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மன்னார்குடி போலீசார் ஊர்வலமாக சென்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இன்று(செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு நெல் கொள்முதல் நிலையங்களை மூடும் எண்ணத்தை கைவிட வேண்டும்.

இ்வ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News