செய்திகள்
சென்னை விமானநிலையம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2021-05-05 21:45 GMT   |   Update On 2021-05-05 21:45 GMT
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது புதுச்சேரியை சேர்ந்த இளங்கோவன் (வயது 46) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

ரூ.28 லட்சம் தங்கம்

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர், உள்ளாடைக்குள் தங்ககட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இளங்கோவனை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.
Tags:    

Similar News