செய்திகள்
கோப்பு படம்

தஞ்சை அருகே மணக்கோலத்தில் காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

Published On 2019-10-31 13:19 GMT   |   Update On 2019-10-31 13:19 GMT
தஞ்சை அருகே திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்த அம்மன்பேட்டையை சேர்ந்தவர் ஸ்டீபன்(வயது30). தஞ்சை அருகே உள்ள நாகத்தியை சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரின் மகள் ஜெயலட்சுமி(23). பால்ராஜ் இறந்து விட்டார். ஜெயலட்சுமி தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

ஜெயலட்சுமி, ஸ்டீபன் இருவரும் தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இருவரும் வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெயலட்சுமியின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காதலர்கள் நேற்று தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மணக்கோலத்தில் இருவரும் வந்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து ஜெயலட்சுமி யின் தாயாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் ஜெயலட்சுமியின் வீட்டில் இருந்து யாரும் போலீஸ் நிலையம் வராததால் ஜெயலட்சுமி, ஸ்டீபன் ஆகியோரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News