செய்திகள்
கோப்புபடம்

மது வாங்கி கொடுத்ததில் தகராறு: வாலிபர் கைது - பெண் மீது வழக்கு

Published On 2021-04-29 13:01 GMT   |   Update On 2021-04-29 13:01 GMT
அரவக்குறிச்சி அருகே மது வாங்கி கொடுத்ததில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கைது செய்த போலீசார் பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டி புதுகாலனியை சேர்ந்தவர்கள் விஜய் (வயது 38). இவரது நண்பர் துரைராஜ். இவர் 2 பேரும் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக சிவக்குமாரின் மைத்துனர் கார்த்திக் (30), அவருடைய மனைவி அம்பிகா, அம்பிகாவின் அக்கா ராணி ஆகியோர் விஜய் மற்றும் துரைராஜியிடம் தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் குக்கர் மூடியாலும், ராணி கல்லாலும் விஜய்யை தாக்கி உள்ளனர். 

இதையடுத்து விஜய் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, கார்த்திக்கை கைது செய்து அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர். மேலும் ராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News