செய்திகள்
முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பரிசாக அளிக்கப்பட்ட வீரவாள்

மருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

Published On 2020-10-30 03:01 GMT   |   Update On 2020-10-30 03:01 GMT
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான இன்று தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி மதுரை கோரிப்பாளைத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி, குருபூஜையையொட்டி அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்களும் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News