செய்திகள்
சிவகாசி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள ராஜதுரைநகரில் வசித்து வந்தவர் விஜயகுமார் (வயது 36). இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் தொழில் தொடங்க தனது மாமனாரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லையாம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த விஜயகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.