செய்திகள்
குத்துச்சண்டை

ஜெர்மனியில் குத்துச்சண்டை அணியைச்சேர்ந்த 25 பேருக்கு கொரோனா

Published On 2020-09-13 13:09 GMT   |   Update On 2020-09-13 13:09 GMT
டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரத்தில் ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்றால் அடுத்த வருடத்திற்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் போட்டிக்கு தயாரகி வந்த வீரர்களின் நான்கு ஆண்டு பயிற்சி வீணாகின. மேலும், கொரோனாவால் பயிற்சிகள் மேற்கொள்ள முடியாமல் இருந்த வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் ஆஸ்திரியாவில் உள்ள திரோல் லியாங்கென்ஃபெல்டில் உள்ள பயிற்சி முகாமில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் 18 வீரர்கள், 8 ஸ்டாஃப்கள் என 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் அறிகுறி இல்லை என்றும், அவர்களால் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடகள கட்டுப்பாடுகள் கவனமாக கவனிக்கப்படும் என்றும், அவர்கள் வீட்டிற்கு கட்டாயம் அனுப்பப்படுவார்கன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News