ஆன்மிகம்
தர்கா

நத்தம் சையது சாகுல்ஹமீது ஆசிக்கீன் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

Published On 2021-11-24 04:14 GMT   |   Update On 2021-11-24 04:14 GMT
நத்தம் சையது சாகுல்ஹமீது ஆசிக்கீன் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி பிரார்த்தனையும் நடந்தது.
நத்தம் பெரிய பள்ளி வாசலில் உள்ள சையதுசாகுல்ஹமீது ஆசிக்கீன் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இதில் நாகூரிலிருந்து கொண்டு வரப்பட்ட

புனித சந்தனம் குடத்தில் நிரப்பப்பட்டு சலங்கைகள் ஒலிக்க தர்காவிலிருந்து டாக்டர் நசீர் அகமது சையது மீரான் தலையில் சுமந்து செல்ல ஊர்வலம்

புறப்பட்டது.

இந்த ஊர்வலம் சந்தனகுடத்தெரு, பெரியகடைவீதி, மஸ்தான் பள்ளிவாசல் வழியாக வந்து மீண்டும் தர்காவை அடைந்தது. தொடர்ந்து அங்கு சந்தனம் பூசும்

நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி பிரார்த்தனையும் நடந்தது.

இதில் வேம்பார்பட்டி அரசுப்பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் கண்ணுமுகமது, முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன்,

தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், அ.தி.மு.க. நகர அவைத்தலைவர் சேக் ஒலி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான

ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News