செய்திகள்
கைது

திருச்செங்கோடு பகுதியில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2021-09-28 08:05 GMT   |   Update On 2021-09-28 08:05 GMT
திருச்செங்கோடு பகுதியில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்பேரில் திருச்செங்கோடு ரூரல் போலீசார் பிரிதி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற பன்னீர்குத்தி பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 26), பரமத்தி கொளக்காட்டுப்புத்தூர் துரைசாமி (42) ஆகியோர் உரிய அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைதுசெய்தனர்.
Tags:    

Similar News