செய்திகள்
கோப்புபடம்

தாரமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2021-01-18 13:52 GMT   |   Update On 2021-01-18 13:52 GMT
தாரமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே உள்ள பூக்கார வட்டம் பகுதியை சேர்ந்தவர் காட்டு ராஜா (வயது 43). இவருடைய மனைவி தைலம்மாள் (41). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று தைலம்மாள் வெந்நீர் வைப்பதற்கு வாட்டர் கீட்டர் போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News