செய்திகள்
பிரதமர் மோடியை பாராட்டிய சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவத்
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் சஞ்சய் ராவத் பாராட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவ சேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சிவ சேனா தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் துணையுடன் ஆட்சியமைத்தது.
அதில் இருந்து இரு கட்சிகளின் தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் தற்கோலை, மும்பை குறித்து நடிகை சர்சைக்குரிய வகையில் பேச்சு, கொரோனா நடவடிக்கை போன்றவை குறித்து பா.ஜனதா கடுமையாக சாடியது. அதற்கு சற்றும் குறையாமல் சிவ சேனா எதிர் கருத்தை வீசியது. குறிப்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை சந்தித்தார். அதன்பின் இன்று சஞ்சய் ராவத் பிரதமர் மோடியை பாராட்டி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி குறித்து சஞ்சய் ராவத் கூறுகையில் ‘‘நரேந்திர மோடி இந்தியா மற்றும் பா.ஜனதா கட்சியின் உயர்ந்த தலைவர் என்பதை நான் நம்புகிறேன். பா.ஜனதா தொடர்ந்து ஏழு வருடமாக எந்தவித இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகிறது என்றால், அதற்கு ஒரே காரணம் நரேந்திர மோடிதான் என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது’’ என்றார்.