ஆன்மிகம்
எஸ்.வாழவந்தி புன்னைவன நாதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

எஸ்.வாழவந்தி புன்னைவன நாதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-07-20 07:50 GMT   |   Update On 2021-07-20 07:50 GMT
மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் பழமையான புன்னைவன நாதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் பழமையான புன்னைவன நாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கன்னி மூலையில் விநாயகர், வடபுறம் அழகுபூரணி அம்பாள் வீற்றிருப்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

தற்போது இந்த கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து சிவபக்தர்கள் சேர்ந்து கோவிலை சுத்தம் செய்தனர். பின்னர் சிதிலமடைந்த பகுதிகளை சரி செய்ததோடு, சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி புன்னைவன நாதீஸ்வரர் மற்றும் அழகுபூரணி அம்பாள் சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News