செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 789 கன அடியாக சரிவு

Published On 2021-08-25 04:14 GMT   |   Update On 2021-08-25 04:14 GMT
மேட்டூர் அணைக்கு இன்று காலை 8 ஆயிரத்து 789 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீருடன், மழை நீரும் சேர்ந்து வந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 301 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 11 ஆயிரத்து 620 கன அடியாக வந்தது.

இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக மீண்டும் சரியத்தொடங்கி உள்ளது. மேட்டூர் அணைக்கு இன்று காலை 8 ஆயிரத்து 789 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி யில் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 550 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரும் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் அதே அளவில் நீடிக்கிறது. நேற்று 66.08 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்றும் அதே அளவில் நீடித்தது.

Tags:    

Similar News