லைஃப்ஸ்டைல்
கேழ்வரகு உளுந்து முருங்கை கீரை தோசை

கேழ்வரகு உளுந்து முருங்கை கீரை தோசை

Published On 2020-06-19 06:01 GMT   |   Update On 2020-06-19 06:01 GMT
உடலுக்கு குளுமை தரும் கேழ்வரகுடன் முருங்கைக்கீரை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான உணவு இது.
தேவையான பொருட்கள்

கேழ்வரகு  மாவு - 1 கப்
உளுந்தம் பருப்பு - கால் கப்
முருங்கை கீரை - 1 கைப்பிடி
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு



செய்முறை

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உளுந்தம் பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறியதும் எடுத்து களைந்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

உளுந்து நன்றாக நைசாக அரைந்ததும் அதில் கேழ்வரகு மாவை சேர்த்து உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

பின் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் அத்துடன் முருங்கை கீரை சேர்த்து நன்கு கலந்து மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் தடவி மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சிவந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

சத்தான சுவையான கேழ்வரகு  உளுந்து முருங்கை கீரை தோசை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News