செய்திகள்
மரணம்

சிவகங்கை அருகே பாம்பு கடித்து பெண் பலி

Published On 2021-09-06 07:47 GMT   |   Update On 2021-09-06 07:47 GMT
சிவகங்கை அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:

சிவகங்கையை அடுத்த கே.பி.கே நகரை சேர்ந்தவர் கென்னடியான். இவரது மனைவி மணிமேகலை (வயது50). இவர் வீட்டுக்கு வெளியே படுத்து இருந்தார். அப்போது விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதைத்தொடர்ந்து அவரை சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News