செய்திகள்
கோப்பு படம்.

மதுரையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்

Published On 2020-01-10 10:09 GMT   |   Update On 2020-01-10 10:09 GMT
மதுரையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை எழுமலையை அடுத்த எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 35). இவர் மல்லப்புரம் தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

அதே பகுதியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர் ஆசிரியர் செல்வத்திடம் டியூசன் படிக்க சென்றார். அப்போது செல்வம் திருமண ஆசை காட்டி அந்த மாணவியை கற்பழித்தார்.

இதனால் அந்த மாணவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்ட் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் சமயநல்லூரை அடுத்த தோடனேரி மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்ற கிருஷ்ணகுமார். அவர் இதே பகுதியில் வசிக்கும் 11-ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த மாணவி சம்பவத்தன்று காலை பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவரை நடுவழியில் தடுத்து நிறுத்திய ராஜேஷ், நான் உன்னை காதலிக்கிறேன், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்‘ என்று வற்புறுத்தி உள்ளார்.

மாணவி இதற்கு மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், என்னை காதலிக் காவிட்டால் உன்னை கொன்று விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News