செய்திகள்
இந்து முன்னேற்ற கழகம்

தமிழக அரசுக்கு இந்து முன்னேற்ற கழகம் பாராட்டு

Published On 2021-06-10 10:39 GMT   |   Update On 2021-06-10 10:39 GMT
தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில் சொத்துக்களை எந்தவித பாரபட்சமும் இன்றி மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர்:

சென்னை வடபழனி கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான நிலத்தை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிரடி நடவடிக்கையால் மீட்டுள்ளார். இதற்கு தமிழக மக்களின் சார்பில் தமிழக அரசுக்கு இந்து முன்னேற்ற கழகம் பாராட்டு  தெரிவித்துள்ளது.

இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில் சொத்துக்களை எந்தவித பாரபட்சமும் இன்றி மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வக்கீல் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News