செய்திகள்
கோப்பையுடன் ஸ்வெரேவ்

ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் - கோப்பையை வென்றார் ஸ்வெரேவ்

Published On 2021-11-22 19:28 GMT   |   Update On 2021-11-22 19:28 GMT
உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை தோற்கடித்தார் ஸ்வெரேவ்.
துரின்:

ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றது.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெட்வடேவும், ஒலிம்பிக் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவும் மோதினர்.

இதில், ஸ்வெரேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் மெட்வடேவை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

ஏடிபி இறுதிச்சுற்று உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்வெரேவ் பெறும் இரண்டாவது டைட்டில் இதுவாகும்.

Tags:    

Similar News