ஆன்மிகம்
மனித மாண்பு மற்றும் அன்புறவை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவர் மற்றவரை எப்படி நோக்குவது, அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இது வழிகாட்டுகிறது.
“பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே” (You Shall Not Covet Your Neighbour’s Wife) என்பது இஸ்ரயேலருக்கு மோசே வழியாக கடவுள் வழங்கிய கட்டளைகளில் ஒன்பதாம் கட்டளை ஆகும். நமது உள்ளார்ந்த உணர்வுகள் கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும். மற்றவருக்கு மணமானவர் மீது இச்சை கொள்வதை இக்கட்டளைத் தடை செய்கிறது.
விவிலியத்தில்
விடுதலைப்பயணம், இணைச்சட்டம் ஆகிய நூல்களில் காணப்படும் 9ஆம் கட்டளையின் வார்த்தைகள் பின்வருமாறு:
விடுதலைப்பயணம் 20:17
பிறர் மனைவியைக் கவர்ந்திட விரும்பாதே.
இணைச்சட்டம் 5:21
பிறர் மனைவியைக் காமுறாதே!
இதயத் தூய்மை
மட்டற்ற சிற்றின்ப வேட்கையை, ஒருவர் எண்ணத்திலும் விருப்பத்திலும் வெற்றிகொள்ள வேண்டுமென ஒன்பதாம் கட்டளை வலியுறுத்துகிறது. இதயத்தை தூய்மைப்படுத்தவும், தன்னடக்கம் என்ற புண்ணியத்தை கடைபிடிக்கவும், சிற்றின்ப வேட்கைக்கு எதிரான போராட்டம் இன்றியமையாததாகிறது. கடவுளின் அருள், கற்பு என்ற புண்ணியம், நோக்கத்தின் தூய்மை, பார்வையின் தூய்மை, கற்பனை மற்றும் உணர்வுகளின் ஒழுக்கம், செபம் ஆகியவற்றின் வழியாக திருமுழுக்கு பெற்ற ஒருவர் இதயத் தூய்மையை அடைய முடியும். கற்பின் உணர்திறனை வெளிப்படுத்தும் தன்னடக்கம், இதயத் தூய்மைக்குத் தேவையானதாக உள்ளது.
தீமையை நாடும் முறையற்ற சிற்றின்ப வேட்கையில் ஆர்வத்தை தூண்டும் அனைத்தையும் தவிர்க்க இதயத் தூய்மை உதவுகிறது. மனித மாண்பு மற்றும் அன்புறவை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவர் மற்றவரை எப்படி நோக்குவது, அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இது வழிகாட்டுகிறது.
எதிரான பாவங்கள்
விபசாரம், புறநிலைப் பாலுறவு, பரத்தைமை, வன்புணர்வு, பலதார மணம் உள்ளிட்ட கற்பு நெறிக்கு எதிரான செயல்களில் ஈடுபடத் தூண்டும் எண்ணங்கள் மற்றும் ஆசைகளே ஒன்பதாம் கட்டளைக்கு எதிரான பாவங்கள் ஆகும்.
விவிலியத்தில்
விடுதலைப்பயணம், இணைச்சட்டம் ஆகிய நூல்களில் காணப்படும் 9ஆம் கட்டளையின் வார்த்தைகள் பின்வருமாறு:
விடுதலைப்பயணம் 20:17
பிறர் மனைவியைக் கவர்ந்திட விரும்பாதே.
இணைச்சட்டம் 5:21
பிறர் மனைவியைக் காமுறாதே!
இதயத் தூய்மை
மட்டற்ற சிற்றின்ப வேட்கையை, ஒருவர் எண்ணத்திலும் விருப்பத்திலும் வெற்றிகொள்ள வேண்டுமென ஒன்பதாம் கட்டளை வலியுறுத்துகிறது. இதயத்தை தூய்மைப்படுத்தவும், தன்னடக்கம் என்ற புண்ணியத்தை கடைபிடிக்கவும், சிற்றின்ப வேட்கைக்கு எதிரான போராட்டம் இன்றியமையாததாகிறது. கடவுளின் அருள், கற்பு என்ற புண்ணியம், நோக்கத்தின் தூய்மை, பார்வையின் தூய்மை, கற்பனை மற்றும் உணர்வுகளின் ஒழுக்கம், செபம் ஆகியவற்றின் வழியாக திருமுழுக்கு பெற்ற ஒருவர் இதயத் தூய்மையை அடைய முடியும். கற்பின் உணர்திறனை வெளிப்படுத்தும் தன்னடக்கம், இதயத் தூய்மைக்குத் தேவையானதாக உள்ளது.
தீமையை நாடும் முறையற்ற சிற்றின்ப வேட்கையில் ஆர்வத்தை தூண்டும் அனைத்தையும் தவிர்க்க இதயத் தூய்மை உதவுகிறது. மனித மாண்பு மற்றும் அன்புறவை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவர் மற்றவரை எப்படி நோக்குவது, அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இது வழிகாட்டுகிறது.
எதிரான பாவங்கள்
விபசாரம், புறநிலைப் பாலுறவு, பரத்தைமை, வன்புணர்வு, பலதார மணம் உள்ளிட்ட கற்பு நெறிக்கு எதிரான செயல்களில் ஈடுபடத் தூண்டும் எண்ணங்கள் மற்றும் ஆசைகளே ஒன்பதாம் கட்டளைக்கு எதிரான பாவங்கள் ஆகும்.