செய்திகள்
விபத்து பலி

வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2021-05-15 10:47 GMT   |   Update On 2021-05-15 10:47 GMT
வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சியை சேர்ந்த அகரம் கூட்டுச்சாலையில் கடந்த மாதம் 21-ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரத்தவெள்ளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தகவல் அறிந்த ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்து போனார். இறந்தவர் யார்? விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News