செய்திகள்

கோவை நகரில் பெண்களை குறி வைத்து நகைபறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

Published On 2018-05-14 10:24 GMT   |   Update On 2018-05-14 10:24 GMT
கோவை நகரில் பெண்களை குறி வைத்து நகைபறித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை போத்தனூர், ராமநாதபுரம் பகுதிகளில் பெண்களை குறி வைத்து நகைப்பறிப்பில் கும்பல் ஈடுபட்டது. மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க உதவி கமி‌ஷனர் சோமசுந்தரம் மேற்பார்வையில் தனிப் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

விசாரணையில் பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது. போத்தனூரை சேர்ந்த விக்னேஷ் (வயது 20), மணிகண்டன் (19) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் போத்தனூர், ராமநாதபுரம் பகுதியில் 5 பெண்களிடம் நகைப் பறித்ததை ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து 15 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News