செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

தொண்டைமான்நல்லூர், நீர்பழனி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-07-16 11:35 GMT   |   Update On 2021-07-16 11:35 GMT
தொண்டைமான்நல்லூர், நீர்பழனி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஆவூர்:

தமிழ்நாடு மின்சார வாரிய கீரனூர் செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குளத்தூர் தாலுகா தொண்டைமான்நல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தொண்டைமான்நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், தென்னதிரையான்பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News