உள்ளூர் செய்திகள்
பாளை டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
பாளை டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் மர்மநபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை:
பாளை முருகன்குறிச்சி நேரு கலை அரங்கம் எதிர்புறம் வாய்க்கால் பாலத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது.
நேற்று இரவு வழக்கம் போல் கடை ஊழியர்கள் வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.
இன்று காலை மீண்டும் ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக பாளை போலீசாருக்கு டாஸ்மாக் கடையின் கண்காணிப்பாளர் வெங்கடாசலம் தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது கடையில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.