ஆட்டோமொபைல்
ஸ்கோடா எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்
ஸ்கோடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு திட்டம் பற்றி அந்நிறுவனத்தின் இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வித திட்டமும் இல்லை என உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிர்வாக இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார்.
ட்விட்டரில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜாக் ஹாலிஸ், 'இந்தியாவுக்கு எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவோம். ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எப்போது வெளியாகும்,' என கூற முடியாது என தெரிவித்தார்.
இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் ஒரு எலெக்ட்ரிக் மாடலையாவது அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஸ்கோடாவின் இந்த அறிவிப்பு சந்தையில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.