செய்திகள்
உடுமலை அருகே தரைப்பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்தில் சிக்கும் பொதுமக்கள்
பாலத்தின் மேல் இருபுறமும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள உடுக்கம்பாளையம் கிராமத்தில் மூன்று சாலை சந்திப்பு உள்ளது. இதன் அருகே மழை நீர் ஓடையின் மேல் தரைப்பாலம் உள்ளது.
இந்த வழியாக புங்கமுத்தூர், சி.பொ சாலை, செல்லப்பம்பாளையம், கம்பாலபட்டி, பெரிய பார்ப்பனூத்து ஆகிய கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.
தரைப்பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் பக்கவாட்டில் சரிந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
பக்க வாட்டில் சிறிய பள்ளம் உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாக வரும்போது வாகனங்கள் பள்ளத்தில் சரிந்து விடுகின்றனர்.
எனவே பாலத்தின் மேல் இருபுறமும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.