கார்
மாருதி சுசுகி கார்

கார் மாடல்களின் விலையை மாற்றும் மாருதி சுசுகி

Published On 2021-12-03 07:26 GMT   |   Update On 2021-12-03 07:26 GMT
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை மீண்டும் மாற்ற இருப்பதாக அறிவித்து இருக்கிறது.


மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 2022 முதல் அமலுக்கு வருகிறது. விலை உயர்வு மாருதி சுசுகி நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களுக்கும் பொருந்தும்.

கார் உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து கார் மாடல்கள் விலை உயர்த்தப்படுகிறது. கார் மாடல்களின் வேரியண்ட்களுக்கு ஏற்ப விலை உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 14 கார்களை விற்பனை செய்து வருகிறது. 



மாருதி சுசுகி எண்ட்ரி லெவல் மாடலான ஆல்டோ விலை ரூ. 3.15 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் எக்ஸ்.எல்.6 மாடல் துவக்க விலை ரூ. 9.98 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்களின் விலை எத்தனை சதவீதம் உயர்த்தப்பட இருக்கிறது என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
Tags:    

Similar News