செய்திகள்
ஈரோடு அருகே விஷம் குடித்து தொழில் அதிபர் தற்கொலை
ஈரோடு அருகே விஷம் குடித்து தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன்லால் (வயது 55). மார்பில்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த ஒரு மாதமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வாழ்க்கையில் விரக்தியுடன் காணப்பட்டார். இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி மோகன்லால் வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மோகன்லால் இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மோகன்லால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.