செய்திகள்
பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி மூக்கன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற அகில இந்தியச் செயலாளர் கிறிஸ்டோபர் திலக், தெலங்கானா மாநிலப் பொருப்பாளர் வி. ஜான் அசோக் ஆகியோர் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்தும், பொருளாதார மந்த நிலையைக் கண்டித்தும் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வட்டாரத் தலைவர்கள் சித்தர், சின்ராசு, ரமேஷ், செந்தில், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.