செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஆந்திரா மாநிலத்தில் 6 லட்சத்தை கடந்த கொரோனா - இன்று ஒரே நாளில் 8,702 பேருக்கு தொற்று

Published On 2020-09-17 18:19 GMT   |   Update On 2020-09-17 18:19 GMT
ஆந்திரா மாநிலத்தில் ஒரே நாளில் 8,702 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே  மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,01,462 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 72 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,177  ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 88,197 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 5,08,088  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Tags:    

Similar News