செய்திகள்
கைது

போச்சம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்ற 6 பேர் கைது

Published On 2021-01-12 10:17 GMT   |   Update On 2021-01-12 10:17 GMT
போச்சம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

போச்சம்பள்ளி போலீசார் போச்சம்பள்ளி- சந்தூர் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற போச்சம்பள்ளி புளியம்பட்டி பக்கமுள்ள திருவயலூரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 52) என்பவரை கைது செய்தனர். பாரூர் போலீசார் மஞ்சமேடு பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற மஞ்சமேட்டை சேர்ந்த பழனி (48) என்பவரை கைது செய்தனர்.

கெலமங்கலம் போலீசார் அக்கொண்டப்பள்ளி பஸ்நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கெலமங்கலம் அண்ணா நகர் பழனி (38) என்பவரை கைது செய்தனர். ஊத்தங்கரை போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற ஊத்தங்கரையை சேர்ந்த சல்மான்கான் (27) என்பவரை கைது செய்தனர். காவேரிப்பட்டணம் போலீசார் கொசமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற கிருஷ்ணகிரி மேல் தெரு வினோத்குமார் (38) என்பவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் 5 ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற மேல்கரடிகுறியை சேர்ந்த சுரேஷ் (24) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News