செய்திகள்
கோப்பு படம்.

புதுப்பேட்டை அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

Published On 2021-03-09 17:01 GMT   |   Update On 2021-03-09 17:01 GMT
புதுப்பேட்டை அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்தி கொண்டனர்.
புதுப்பேட்டை:

புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகள் விஜயலட்சுமி (வயது 19). கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.. இவர் அதே ஊரைச்சேர்ந்த அங்கப்பன் என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணமான பின்பும் கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி கல்லூரிக்கு சென்று வந்த விஜயலட்சுமியை கணவர் அங்கப்பன் மற்றும் அவரது உறவினர்கள் திட்டியதாக தெரிகிறது. 

இதில் மனமுடைந்த விஜயலட்சுமி வீட்டின் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். 

இதுகுறித்து மூர்த்தி புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் கல்லூரி மாணவி இறந்ததால் அவரது சாவு குறித்து கடலூர் கோட்டாட்சியர் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News