செய்திகள்
5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
பஞ்சாப், கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
புதுடெல்லி:
கோவா, மணிப்பூர் சட்டப்பேர்வையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் 14-ம் தேதியுடனும், பஞ்சாப்பின் பதவிக் காலம் மார்ச் 15-ம் தேதியுடனும் முடிவடைகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலமும் விரைவில் நிறைவடைய உள்ளது.
இதற்கிடையே, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நேற்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையும் படியுங்கள்...பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார் பூபேஷ் பாகல்