உள்ளூர் செய்திகள்
பள்ளி தலைமையாசிரியர்களுடன் கலெக்டர் ஆலோசனை
வகுப்புகளில் கொரோனா தடுப்பு வழிகளை கடைப்பிடிப்பது எப்படி? என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுக்காக 10,11,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அரசு பள்ளிகளில் சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக திருப்பூர் கலெக்டர் வினீத் இன்று தலைமையாசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வகுப்புகளில் கொரோனா தடுப்பு வழிகளை கடைப்பிடிப்பது எப்படி? என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.