செய்திகள்
முக ஸ்டாலின்

உதயசூரியனை காண தமிழக மக்கள் தயாராகி விட்டனர்- முக ஸ்டாலின்

Published On 2020-10-18 07:11 GMT   |   Update On 2020-10-18 10:58 GMT
உதயசூரியனை காண தமிழக மக்கள் தயாராகி விட்டதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்திரன் இல்ல திருமணத்தை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார் அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தலையாட்டி பொம்மைகளின் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சி அமைக்க நம்மை தயார்படுத்த வேண்டும். மாநில அரசு உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது.

உதயசூரியனை காண தமிழக மக்கள் தயராகிவிட்டனர்.  6 மாதத்திற்கு பிறகு காட்சி மாறும்; செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும். திமுகவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ, ஏன் தொட்டுப்பார்க்கவோ முடியாது.  ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் திடமான தீர்ப்பை தி.மு.க.,விற்கு தர தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News