செய்திகள்
நிலக்கோட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
நிலக்கோட்டை அருகே மாமனார் திட்டியதால் மனமுடைந்த மருமகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நிலக்கோட்டை:
பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 37). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகள் தனலெட்சுமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. தற்போது பூர்வீக ஊரான நிலக்கோட்டை அருகே உள்ள உச்சபட்டியில் தனது மனைவியுடன் தங்க பாண்டி வசித்து வந்தார்.
அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தனலெட்சுமி கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். தனது மனைவியை அழைத்து வருவதற்காக தங்கபாண்டி சென்றார். அப்போது தனலெட்சுமியின் தந்தை முருகன், அவரது தம்பி கார்த்திக் ஆகிய 2 பேரும் தங்கபாண்டியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர்.
இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்கு பதிவு செய்து முருகன் மற்றும் கார்த்திக் ஆகியோரை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 37). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகள் தனலெட்சுமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. தற்போது பூர்வீக ஊரான நிலக்கோட்டை அருகே உள்ள உச்சபட்டியில் தனது மனைவியுடன் தங்க பாண்டி வசித்து வந்தார்.
அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தனலெட்சுமி கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். தனது மனைவியை அழைத்து வருவதற்காக தங்கபாண்டி சென்றார். அப்போது தனலெட்சுமியின் தந்தை முருகன், அவரது தம்பி கார்த்திக் ஆகிய 2 பேரும் தங்கபாண்டியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர்.
இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்கு பதிவு செய்து முருகன் மற்றும் கார்த்திக் ஆகியோரை தேடி வருகின்றனர்.