செய்திகள்
கோப்புப்படம்.

உடுமலை சாலையில் பெரிய அளவிலான தகவல் பலகை அமைப்பு

Published On 2021-07-18 08:44 GMT   |   Update On 2021-07-18 08:44 GMT
உடுமலை -சின்னாறு சாலையில் மெகா சைஸ் தகவல் பலகை சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ் ஆனைமலை- பூலாங்கிணறு, உடுமலை- சின்னாறு, உடுமலை-செஞ்சேரிமலை, திருமூர்த்திமலை, தளி -கொமரலிங்கம், அமராவதிநகர்  சாலை  ஆகிய சாலைகள் மாவட்ட முக்கிய  சாலைகள்  பிரிவின் கீழ் பராமரிக்கப்படுகிறது.

இந்தநிலையில் பல்வேறு கிராமங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் இணைக்கும் இந்த மாவட்ட முக்கிய  சாலைகளில் அருகில் உள்ள  நகரம் குறித்த  விபரங்களை உள்ளடக்கிய தகவல் பலகை மட்டும் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது  தேசிய நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்படும் முக்கிய நகரங்கள் குறித்த தகவல் பலகை மாவட்ட முக்கிய  சாலைகளில்  நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில்  உடுமலை -சின்னாறு  சாலையில் மெகா சைஸ் தகவல் பலகை  சோதனைச்சாவடி   அருகே அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று முக்கிய இடங்களில் தகவல் பலகை அமைக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News