செய்திகள்
பருத்தி

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்

Published On 2021-07-18 09:16 GMT   |   Update On 2021-07-18 09:16 GMT
மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி,உடுமலை, கோவை, புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 636 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனர்.
மூலனூர்:

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகமாக பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் கரூர், திருச்சி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம், கள்ளிமந்தயம், ஒட்டன்சத்திரம், கரூர், அரவக்குறிச்சி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதை கொள்முதல் செய்வதற்கு மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உடுமலை, கோவை, புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 636 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனர்.

இதில் வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7306-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.5350-க்கும் ,சராசரி விலை ரூ.6200-க்கும் விலை போனது. அந்த வகையில் இந்த வாரம் மொத்தம் 5729-பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. அதன் மொத்த மதிப்பு ரூ.1,13,26549ஆகும் இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் பாலச்சந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
Tags:    

Similar News