செய்திகள்
தற்கொலை

கோவை அருகே மூதாட்டி சாணிபவுடர் குடித்து தற்கொலை

Published On 2019-11-06 11:25 GMT   |   Update On 2019-11-06 11:25 GMT
கோவை அருகே மூதாட்டி சாணிபவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்காநல்லூர்:

கோவை நீலிகோணாம்பாளையம் ஜெயாநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி ராஜம்மாள்(வயது 65). இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர். மயில்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து ராஜம்மாள் தனது மகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்தும் கேட்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த சாணிபவுடரை எடுத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News