செய்திகள்
கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.82 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2020-12-06 00:22 GMT   |   Update On 2020-12-06 00:22 GMT
சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.88 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது இர்பான் (வயது 36), லியாகத் அலி (36), சையத் அபுதாகிர் (21), திருச்சியை சேர்ந்த முகமது இர்திஷ் (25), சென்னையை சேர்ந்த அபூபக்கர் சித்தீக் (21) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அனைவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.82 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் செல்ல வந்த சென்னையை சேர்ந்த ஜாகீர் உசேன் (40) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் யூரோ கரன்சிகள் மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள யூரோ கரன்சிகளை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.88 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் யூரோ கரன்சிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக 6 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News