செய்திகள்
மதுக்கூடமாக மாறும் உடுமலை நகராட்சி பூங்கா
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கி பூங்காவை நவீனப்படுத்தியும் சரியான சீரமைப்பு இல்லை.
உடுமலை:
உடுமலை சர்தார் ரோட்டில் உள்ளது நகராட்சி பூங்கா. இந்த பூங்கா அருகிலேயே நகராட்சி நடுநிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, வாரச்சந்தை, ரெயில் நிலையம் அமைந்துள்ளது. ஆனாலும் பூங்கா சமூக விரோதிகளின் புகலிடமாகவும் இரவில் மதுக்கூடமாகவும் இருந்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கி பூங்காவை நவீனப்படுத்தியும் சரியான சீரமைப்பு இல்லை.
எனவே இந்த பூங்காவை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கீழ் பராமரிப்பு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.