செய்திகள்
கேரளாவில் இன்று புதிதாக 43,529 பேருக்கு கொரோனா: 34,600 டிஸ்சார்ஜ்
கேரளாவில் இன்று 34,600 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவிற்கு 95 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்று புதிதாக 43,529 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,600 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 95 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இதுவரை 6,053 பேர் உயிரிழந்துள்ளனர். 15,71,738 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,46,320 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.