செய்திகள்
ஓசூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் கந்தன். இவருடைய மனைவி முருகம்மாள் (வயது 40). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முருகம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.