செய்திகள்
தொடர் மழையால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 11,000 கனஅடியாக அதிகரிக்க, வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,255 கனஅடியாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளும் நிரம்பத் தொடங்கி உள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகளும் நிரம்பத் தொடங்கி உள்ளதால், அணைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.