செய்திகள்
விஜய் வசந்த் எம்.பி. மீது மேலும் ஒரு வழக்கு
விஜய் வசந்த் எம்.பி. மீது ஏற்கனவே மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் மேலும் ஒரு வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் காங்கிரசார் நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவிலில் சைக்கிள் பேரணி நடத்திய விஜய்வசந்த எம்.பி., மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட 34 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 34பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட விஜய்வசந்த் எம்.பி. உள்பட 34 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஜய்வசந்த் எம்.பி. மீது ஏற்கனவே மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் மேலும் ஒரு வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.