செய்திகள்
அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒரு சுதந்திர யாத்திரை ஸ்தலம்: அமித் ஷா
அந்தமான் நிக்கோபார் தீவுகள் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்தமான் நிக்கோபார் தீவுகள் சென்றுள்ளார். சுபாஷ் சந்திரபோஸ் தீவில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை திறந்து வைத்த நிலையில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் டி.கே.ஜோஷி கலந்து கொண்டார்.
பின்னர் அமித் ஷா பேசுகையில் ‘‘அந்தமான்- நிக்கோபார் தீவுகள் ஒரு சுதந்திர யாத்திரை ஸ்தலம். இளைஞர்கள் அனைவரும் ஒருமுறையாவது அந்தமான்- நிக்கோபார் தீவுகள் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.