உள்ளூர் செய்திகள்
திருமூர்த்திமலையில் நீச்சல் குளம் திறப்பு-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நீச்சல்குளம் மூடப்பட்டிருந்தது.
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் உள்ள நீச்சல் குளம் உடுமலை நகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நீச்சல் குளம் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளதால் பெரியவர்களுக்கு ரூ.20-ம் சிறியவர்களுக்கு ரூ.15-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த இந்த நீச்சல் குளம் 10 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.