செய்திகள்
தாடிக்கொம்புவில் விதி மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்
தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதி மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்களை அதிகாரிகள் அகற்றினர்.
தாடிக்கொம்பு:
சென்னை அருகே பேனர் விழுந்து இளம்பெண் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்திலும் கலெக்டர் உத்தரவின்பேரில் அனைத்து பகுதிகளிலும் பேனர்கள் அகற்றப்பட்டன.
தாடிக்கொம்பு பகுதியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன் அறிவுரையின்பேரில் செயல் அலுவலர் சுதர்சன் மற்றும் பணியாளர்கள் பேனர்களை அகற்றினர்.
மேலும் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் ஒட்டப்பட்ட சினிமா மற்றும் வர்த்தக போஸ்டர்களையும் கிழித்து அகற்றினர். பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி பேனர் வைத்தாலோ அரசு சுவர்களில் போஸ்டர்கள், விளம்பரம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் எச்சரித்தார்.
சென்னை அருகே பேனர் விழுந்து இளம்பெண் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்திலும் கலெக்டர் உத்தரவின்பேரில் அனைத்து பகுதிகளிலும் பேனர்கள் அகற்றப்பட்டன.
தாடிக்கொம்பு பகுதியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன் அறிவுரையின்பேரில் செயல் அலுவலர் சுதர்சன் மற்றும் பணியாளர்கள் பேனர்களை அகற்றினர்.
மேலும் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் ஒட்டப்பட்ட சினிமா மற்றும் வர்த்தக போஸ்டர்களையும் கிழித்து அகற்றினர். பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி பேனர் வைத்தாலோ அரசு சுவர்களில் போஸ்டர்கள், விளம்பரம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் எச்சரித்தார்.